×

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து திரும்பிய கணவர்: கொரோனா அச்சத்தால் வீட்டுக்குள் சேர்க்காத மனைவி!

திருச்சி துவாக்குடி மலை, மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பாவா. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்தார். தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியேறி நிர்கதியாக தெருவில் நின்றுள்ளார். இதை கண்ட சில சமூக ஆர்வலர்கள் சிலர் பாவாவிடம்
 

திருச்சி துவாக்குடி மலை, மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பாவா. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்தார்.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியேறி நிர்கதியாக தெருவில் நின்றுள்ளார். இதை கண்ட சில சமூக ஆர்வலர்கள் சிலர் பாவாவிடம் அவரின் முகவரியை கேட்டு தெரிந்துக்கொண்டு அவரை வீட்டில் ஒப்படைத்தனர்.

ஆனால் அவரின் மனைவியோ, முன்பை விட பாவாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்து உள்ளதை பார்த்து அவருக்கு கொரோனா இருக்குமோ என்று நினைத்து அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனால் இரவு 12 மணிவரை வாசலில் அமர்ந்து கொண்டிருந்தவரை பார்த்து பரிதாபாப்பட்ட அப்பகுதிவாசிகள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அவரை அரசு மறுத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.