×

சென்னையின் அருகே பல இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை
 

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

Torrential rain causing flood.

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்தது. விழுப்புரம் ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை அருகே பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், புழல் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.