×

நெல்லையில் கனமழை : ஆறுபோல் காட்சியளித்த சாலைகள்; வாகன ஓட்டிகள் அவதி!

நெல்லையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறு போல காட்சியளித்தது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நெல்லையில் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் முதலே மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இந்நிலையில் திருநெல்வேலி இரடுக்கு மேம்பாலம் அருகில் காலையிலே மழை கொட்டி தீர்த்தத். ஒரு மணிநேர
 

நெல்லையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறு போல காட்சியளித்தது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக நெல்லையில் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் முதலே மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இந்நிலையில் திருநெல்வேலி இரடுக்கு மேம்பாலம் அருகில் காலையிலே மழை கொட்டி தீர்த்தத். ஒரு மணிநேர தொடர்ந்து பெய்த மழையினால் சாலைகள் மூடி ஆறு போல் காட்சி அளித்தன.

பேருந்துகளின் சக்கரங்கள் மறைந்து மழை நீரில் ஊர்ந்து சென்றன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டன.

இதை தொடர்ந்து அங்கு வந்த நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் இருந்த நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.