×

“தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் தானாம்” -கொரானா பற்றி குறி சொன்னவரின் அருள்வாக்கு .

திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு செல்லும் வழியில் நீடாமங்கலம் என்று ஊரில் செல்வராஜ் என்பவர் அருள்வாக்கு சொல்லி வருகிறார் .இவர் தமிழகத்தின் அடுத்த முதல்வர் பற்றி சொன்ன அருள்வாக்கால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . செல்வராஜ் என்ற அருள்வாக்கு சொல்பவர் , உலகிற்கு இந்த ஆண்டு ஒரு கிருமியால் பாதிப்பு ஏற்படுமென்று முன்கூட்டியே தமக்கு தெரியுமென்றும் அதை அந்த ஊரில் உள்ளவர்களிடம் சொன்னதற்கு யாரும் நம்பாததால் தாம் அதை பற்றி வெளியே சொல்வதை நிறுத்திவிட்டதாக கூறினார் .அவர் அந்த ஊரில்
 

திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு செல்லும் வழியில் நீடாமங்கலம் என்று ஊரில் செல்வராஜ் என்பவர் அருள்வாக்கு சொல்லி வருகிறார் .இவர் தமிழகத்தின் அடுத்த முதல்வர் பற்றி சொன்ன அருள்வாக்கால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .


செல்வராஜ் என்ற அருள்வாக்கு சொல்பவர் , உலகிற்கு இந்த ஆண்டு ஒரு கிருமியால் பாதிப்பு ஏற்படுமென்று முன்கூட்டியே தமக்கு தெரியுமென்றும் அதை அந்த ஊரில் உள்ளவர்களிடம் சொன்னதற்கு யாரும் நம்பாததால் தாம் அதை பற்றி வெளியே சொல்வதை நிறுத்திவிட்டதாக கூறினார் .
அவர் அந்த ஊரில் பிழைப்புக்காக ஒரு பழக்கடையும் நடத்தி வருவதோடு இப்படி தேடி வருவோருக்கு அருள் வாக்கும் கூறி வருகிறார் .அவருக்கு கடந்த வாரம் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றியதாகவும் அப்போது தன் பெயரில் உள்ளவர்தான் அடுத்து தமிழகத்தை ஆளப்போகிறாரென்றும் கூறியதாக அவர் கூறினார் .
திருசெந்தூர் முருகனின் மறுபெயர் பழனிசாமி என்பதால் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்தின் முதல்வராக வருவாரென்று அவர் கூறினார் .தமக்கு இப்படி எதிர்காலத்தில் நடப்பதெல்லாம் கனவில் ஏதாவதொரு வகையில் தோன்றுமென்றும் அந்த சக்தியினால் பல பேருக்கு தான் சொன்னதெல்லாம் நடப்பதாக கூறினார் .
பிறகு இந்த விஷயத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழநிசாமியிடம் சமீபத்தில் அந்த பகுதிக்கு அவர் வந்தபோது தாம் கூறியதாகவும் ,அப்போது தம்மை கூப்பிட்டு அவர் பேசியபோது சில பூஜைகளும் ,பரிகாரங்களும் ,யாகமும் செய்ய சொன்னதாக அவர் கூறினார்.