ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 5727 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
2017-18ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தமிழக அரசுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி தொகை ரூ.5727 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
40வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “2017-18ம் ஆண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய மத்திய அரசு ஜிஎஸ்டி தொகை ரூ.4073 கோடி, 2018-19ம் ஆண்டு நிலுவையில் உள்ள ரூ.553.61 கோடி, 2019-20ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.1101.61 கோடியை விரைந்து வழங்க வேண்டும்.