×

‘விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமி’ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

காஷ்மீரின் லடாக் பகுதியில் நேற்று காலை நடந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (34) உயிரிழந்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் கருப்பசாமிக்கு 7 வயதுக்குள்ளான 2 மகள்களும், ஒரு வயதில் மகனும் இருக்கிறார்கள். சொந்த ஊருக்கு வந்திருந்த வீரர் கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதமே பணிக்கு திரும்பிய நிலையில், அவரின் மரணம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது குடும்பத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராணுவ வீரர்
 

காஷ்மீரின் லடாக் பகுதியில் நேற்று காலை நடந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (34) உயிரிழந்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் கருப்பசாமிக்கு 7 வயதுக்குள்ளான 2 மகள்களும், ஒரு வயதில் மகனும் இருக்கிறார்கள். சொந்த ஊருக்கு வந்திருந்த வீரர் கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதமே பணிக்கு திரும்பிய நிலையில், அவரின் மரணம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது குடும்பத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராணுவ வீரர் கருப்பசாமியின் இல்லத்துக்கு சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கிய அமைச்சர் பிள்ளைகளின் கல்வி செலவுக்கு அரசு உதவி செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார். இதை தொடர்ந்து, ராணுவ வீரர் கருப்பசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.