×

உடல்நல குறைவால் இறந்த ஐல்லிகட்டு காளைக்கு, மனிதர்களுக்கு சடங்கு செய்வதுபோல் செய்து புதைப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் V.நகர் 5-வது தெருவில் ஆட்டோ மணி என்பவர் கடந்த 5 வருடங்களாக ஐல்லிகட்டு காளை வளர்த்து வருகிறார். இந்த காளையானது இதுவரை 50 -க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளி நாணயம், குக்கர், அண்டா, குண்டா என பல பரிசுகளை பெற்று பெருமை சேர்த்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக உடல் குறைவால் அவதிபட்ட வந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு இறந்தது. இதை தொடர்ந்து காளையை வளர்த்து
 

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் V.நகர் 5-வது தெருவில் ஆட்டோ மணி என்பவர் கடந்த 5 வருடங்களாக ஐல்லிகட்டு காளை வளர்த்து வருகிறார்.

இந்த காளையானது இதுவரை 50 -க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளி நாணயம், குக்கர், அண்டா, குண்டா என பல பரிசுகளை பெற்று பெருமை சேர்த்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக உடல் குறைவால் அவதிபட்ட வந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு இறந்தது. இதை தொடர்ந்து காளையை வளர்த்து வந்த ஆட்டோ மணி என்பவர் வீட்டு முன்பு வைக்கப்பட்ட காளைக்கு மனிதர்களுக்கு செய்வது போல் தேங்காய், பழம், வைத்து மாலை அணிவித்து விளக்கேற்றி சடங்குகள் செய்யப்பட்டது.

இந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காளைலை வணங்கி சென்றனர். தொடர்ந்து காளையை ஜேசிபி உதவியுடன் கோனேரிப்பட்டி இடுகாட்டில் அடக்கம் செய்தனர்