இன்று முழு ஊரடங்கு எதிரொலி: நேற்று ஒரே நாளில் ரூ.171 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எதவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் நேற்று
Jul 5, 2020, 18:22 IST
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எதவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் நேற்று ஒரேநாளில் 171 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுபிரியர்கள் முன்கூட்டியே மது வாங்கி வைத்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.