×

ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள்… ஆத்திரத்தில் தலையை துண்டித்த கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார். 21 வயதான இவர் பெயிண்டராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மந்தித்தோப்பு காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தா.ர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அத்துடன் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார். 21 வயதான இவர் பெயிண்டராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மந்தித்தோப்பு காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தா.ர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அத்துடன் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் 17 வயது சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. அதில் மதன்குமாரும் நானும் ஒன்றாக பெயிண்டர் வேலை செய்து வந்தோம். தான் காதலித்து வந்த பெண்ணே மதன்குமார் காதலித்து வந்தது அவன் செல் போனை வாங்கி பார்த்த பிறகு தனது தெரியவந்தது. இதனால் காதலை விட்டுவிடுமாறு மதன்குமாரிடம் கூறினேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நான் மது அருந்தலாம் என்று கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

ஏற்கனவே அங்கு நான் முட்புதரில் அரிவாளை மறைத்து வைத்திருந்தேன். மதன்குமார் போதையில் இருந்தபோது அங்கு இருந்த அரிவாளை எடுத்து வந்து மதன் குமாரின் தலையை வெட்டினேன். அவள் தலை துண்டானது. இதையடுத்து அரிவாளை அங்குள்ள கண்மாயிலில் வீசிவிட்டு புலி குகை பகுதியில் பதுங்கி கொண்டேன் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து மதன் குமாரை கொலை செய்த வழக்கில் 17வயது சிறுவனை போலீசார் கைது செய்து கூர்நோக்கு சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.