×

அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா.. நீட் தேர்வு பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என
 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா.. நீட் தேர்வு பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என பல கேள்விகள் எழுந்த நிலையில், ஜூன் 2 ஆம் வாரத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதன் படி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என இணைய வழியில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் https://t.co/eXCcQlp0sD என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.