×

விவாகரத்தான மனைவியுடனே மீண்டும் கட்டாய திருமணம் : தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர்!

சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவரது மனைவி சத்யா. இவர்கள் அம்பத்தூரில் உள்ள பாடியில் லேத் பட்டறையில் பணிபுரிந்து வந்த போது காதலித்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இந்நிலையில் பிரித்விராஜ் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்துள்ளார். இதை அறிந்த முன்னாள்
 

சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவரது மனைவி சத்யா. இவர்கள் அம்பத்தூரில் உள்ள பாடியில் லேத் பட்டறையில் பணிபுரிந்து வந்த போது காதலித்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் பிரித்விராஜ் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்துள்ளார். இதை அறிந்த முன்னாள் மனைவி சத்யாவின் சகோதரர்கள் பிரித்விராஜை அடித்து உதைத்ததுடன் அவரை கடத்தி சென்று மாமல்லபுரத்தில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளனர். பின்னர் மீண்டும் தனது தங்கையுடன் வாழ வேண்டும் என்று கூறி அவரை துன்புறுத்தியதோடு கட்டாய திருமணமும் செய்து வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரித்திவிராஜ் அங்கிருந்து தப்பி சென்று தனது வீட்டை அடைந்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் தனது வீட்டு வாயிலில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரித்விராஜிடம் வாக்குமூலம் பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பிரித்விராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார் முன்னாள் மனைவி சத்யா, அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவர்கள் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது