×

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த வாலிபர், தீயணைப்பு வீரர் உயிரிழப்பு!

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் தவறிவிழுந்த வாலிபரும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்தனர். மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் அருகே செல்லியப்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இன்று மாலை கிணற்றிற்குள் தவறிவிழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்குவந்த தீயணைப்புத்துறையினர், ராதாகிருஷ்ணண் உடலை மீட்க கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது ராதாகிருஷ்ணனை உயிருடன் மீட்க முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை. மேலும் கிணற்றுக்குள் இறங்கிய மூன்று தீயணைப்பு
 

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் தவறிவிழுந்த வாலிபரும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்தனர். மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் அருகே செல்லியப்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இன்று மாலை கிணற்றிற்குள் தவறிவிழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்குவந்த தீயணைப்புத்துறையினர், ராதாகிருஷ்ணண் உடலை மீட்க கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது ராதாகிருஷ்ணனை உயிருடன் மீட்க முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை. மேலும் கிணற்றுக்குள் இறங்கிய மூன்று தீயணைப்பு வீரர்களும் மயக்கமடைந்தனர். தொடர்ந்து அவர்களை அப்பகுதி மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு செல்லும் வழியில் தீயணைப்பு படைவீரர் ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.