×

ஓடிப்போன மகள் -தேடிப்போன தந்தை -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

மகள் வேறு சாதியை சேர்ந்தவரை கல்யாணம் செய்து கொண்டதால் கோபமுற்ற தந்தை அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . ஜார்க்கண்டின் தன்பாத்தில் வசிக்கும் , ராம் பிரசாத் என்பவர் தனது 18 வயதான மகள் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் குஷ்பு குமாரி வேறொரு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார் .அதனால் அந்த ராம்பிரசாத் அந்த மகள் குஷ்பு மீது கடும் கோபத்திலிருந்தார் .ஆனால் அந்த பெண் அவரின் காதலனைத்தான்
 

மகள் வேறு சாதியை சேர்ந்தவரை கல்யாணம் செய்து கொண்டதால் கோபமுற்ற தந்தை அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

ஜார்க்கண்டின் தன்பாத்தில் வசிக்கும் , ​​ராம் பிரசாத் என்பவர் தனது 18 வயதான மகள் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் குஷ்பு குமாரி வேறொரு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார் .அதனால் அந்த ராம்பிரசாத் அந்த மகள் குஷ்பு மீது கடும் கோபத்திலிருந்தார் .ஆனால் அந்த பெண் அவரின் காதலனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தார் .அதனால் அவரின் தந்தையின் எதிர்ப்பையும் மீறி அந்த பெண் அவரின் காதலனை கல்யாணம் செய்து கொண்டார் .

அதனால் அந்த தந்தை ராம்பிரசாத் தான் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் மகள் செய்து விட்டாரே என்று நினைத்தார் .அதனால் தன்னை அவமானப்படுத்திய மகளை பழிவாங்க துடித்தார் .

அதன் படி கடந்த வாரம் அவரின் கர்ப்பிணி மகளோடு சமாதானமாக போவது போல நடித்தார் .அதன் பிறகு மகளையும் மனைவியையும் கூட்டி கொண்டு தன்னுடைய பண்ணை நிலத்தை சுற்றி காமிக்க கூட்டி சென்றார் .பிறகு அந்த நிலத்தில் வைத்து அவரின் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார் .பின்னர் அந்த நிலத்த்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அந்த குஷ்புவின் பிணத்தை  போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .பின்னர் அந்த மகளை கொன்ற ராம்பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்