×

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்!

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் இன்று காலமானார். அவருக்கு வயது 81. சாத்தான்குளத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் ரஞ்சிப் போட்டியில் தமிழ்நாடு- கேரளா அணிகள் மோதிய போது வானொலியில் தமிழ் வர்ணனை செய்தார். வானொலியில் அவரது வர்ணனையை கேட்ட பலரும் அவரது குரலுக்கு அடிமையாகினர். அதன்பிறகு ஈஎஸ்பின், நியூஸ் ஸ்போட்ஸ் போன்ற விளையாட்டு தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை செய்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவங்களை புத்தகமாக எழுதிய இவர் அதை ஆடியோ
 

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

சாத்தான்குளத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் ரஞ்சிப் போட்டியில் தமிழ்நாடு- கேரளா அணிகள் மோதிய போது வானொலியில் தமிழ் வர்ணனை செய்தார். வானொலியில் அவரது வர்ணனையை கேட்ட பலரும் அவரது குரலுக்கு அடிமையாகினர். அதன்பிறகு ஈஎஸ்பின், நியூஸ் ஸ்போட்ஸ் போன்ற விளையாட்டு தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை செய்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவங்களை புத்தகமாக எழுதிய இவர் அதை ஆடியோ நூல்களிலும் பதிவு செய்துள்ளார்.35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக இருந்த அப்துல் ஜப்பார் உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அப்துல் ஜப்பார் சென்னையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.