×

மதுரை, தேனியிலும் மின்கட்டணம் செலுத்த அவகாசம்!

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம்
 

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை தேனி மாவட்ட மக்கள் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.