×

ஈரோடு- மாணவர்களின் மனித கடவுளே ஈரோட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பேனர்

ஈரோடு செப் 3:கொரோனா வைரஸ் இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துது வருகிறது இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இதனால் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது பள்ளிகள் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று முறையான அறிவிப்பு இன்று வரை வரவில்லை . இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாகவும்
 

ஈரோடு செப் 3:
கொரோனா வைரஸ் இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துது வருகிறது இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இதனால் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது பள்ளிகள்

கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று முறையான அறிவிப்பு இன்று வரை வரவில்லை . இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பு வெளியிட்டார் இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோடு

கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் பகுதியில் ஏற்கனவே வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டன பின்னர் அவற்றை போலீசார் அப்புறப்படுத்தினர் இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் பகுதியான மூல பட்டறை பஸ் நிலையம் மேட்டூர் ரோடு போன்ற பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு

வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன அந்த பேனரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்துடன்மா ணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற கழகம் என எழுதப்பட்டிருந்தது

இந்த பேனர்களை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்
செய்தி: அமுதினி