×

பாத்ரூமுக்குள் சென்ற மனைவி அலறல்! சத்தம் கேட்டு ஓடிவந்த கணவரும் அலறல்!

ஈரோடு முத்தம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பேஸ் ஒன்றில் வசித்து வருபவர் பழனிச்சாமி |வயது 48). இன்று காலை அவரது மனைவி குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்றார். அப்போது குளியலறைக்குள் மூன்று பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். மனைவி சத்தத்தை கேட்டு பழனிச்சாமி எழுந்து வந்து குளியலறையை பார்த்தார். பின்னர் பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பாம்புகள் வெளியே வராதவாறு கதவை பூட்டினார். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு
 

ஈரோடு முத்தம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பேஸ் ஒன்றில் வசித்து வருபவர் பழனிச்சாமி |வயது 48). இன்று காலை அவரது மனைவி குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்றார். அப்போது குளியலறைக்குள் மூன்று பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். மனைவி சத்தத்தை கேட்டு பழனிச்சாமி எழுந்து வந்து குளியலறையை பார்த்தார். பின்னர் பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பாம்புகள் வெளியே வராதவாறு கதவை பூட்டினார்.

இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளியல் அறைக்குள் பதுங்கி இருந்த 3 பாம்புகளை மீட்டனர். அந்தப் பாம்புகள் கொடிய விஷத்தன்மை கொண்ட சாரைப் பாம்புகள் ஆகும். ஒவ்வொன்றும் 3 அடி முதல் 4 அடி வரை இருந்தது

.பின்னர் அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது . பழனிச்சாமி வீட்டின் அருகில் குடியிருக்கும் மற்ற குடியிருப்புவாசிகள் பீதியுடன் உள்ளனர் இந்தப் பகுதியில் நிறைய முட்புதர்கள் உள்ளன அவை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.