×

`90% பேர் மின் கட்டணம் செலுத்திவிட்டனர்!’- கால அவகாசம் கோரிய வழக்கு தள்ளுபடி

மின் கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மின் கட்டணம் செலுத்த ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு
 

மின் கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மின் கட்டணம் செலுத்த ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 1108 கோடியே 36 லட்சம் ரூபாய் மின்கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையினர் மின் கட்டணத்தை செலுத்தி விட்டனர். ஊரடங்கில் மின் இணைப்பு துண்டிக்கவில்ல. சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கெனவே 90 சதவீதம் பேர் மின் கட்டணம்  செலுத்தி விட்டதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.