×

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தான்

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் செஞ்சி தொகுதி
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த மாதம் செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தான் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

முன்னதாக அமைச்சர்கள் கேபி அன்பழகன், செல்லூர் ராஜு, எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.