×

‘ஆடி கார் அய்யாக்கண்ணு’ என அவதூறு பரப்பிய திமுக நிர்வாகி கைது!

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது அவதூறு பரப்பிய திமுக ஐ.டி விங்க் நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு. திருச்சி மாநகரம் அண்ணாமலை நகரில் வசித்து வருகிறார். இவரை ஆடி கார் அய்யாக்கண்ணு என சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அய்யாக்கண்ணு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சைபர்
 

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது அவதூறு பரப்பிய திமுக ஐ.டி விங்க் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு. திருச்சி மாநகரம் அண்ணாமலை நகரில் வசித்து வருகிறார். இவரை ஆடி கார் அய்யாக்கண்ணு என சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அய்யாக்கண்ணு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அய்யாக்கண்ணு குறித்து அவதூறு பரப்பியவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயச்சந்திரன்(40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், சமூக வலைதளங்களில் போலி முகவரிகளின் மூலம் 2 ஆண்டுகளாக அவதூறு பரப்பி வந்ததும் தெரியவந்தது.