தேமுதிக பிரமுகர் மற்றும் அவரது மாமனார் சாலை விபத்தில் பலி!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மரத்தில் கார் தேமுதிக பிரமுகர் மற்றும் அவரது மாமனார் பரிதாபமாக உயிரிழந்தனர். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் விஜய்கமல் இந்த விபத்தில் உயிரிழந்தார். தோக்கவாடியில் நிகழ்ந்த இந்த விபத்தில் விஜய்கமலின் மாமனார் ரங்கநாதனும் உயிரிழந்த த நிலையில் குடும்பத்தினர் 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விஜய் கமல் மற்றும் அவரின் மாமனார் ரங்கநாதன் உடலை மீட்டு
Oct 22, 2020, 10:38 IST
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மரத்தில் கார் தேமுதிக பிரமுகர் மற்றும் அவரது மாமனார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் விஜய்கமல் இந்த விபத்தில் உயிரிழந்தார். தோக்கவாடியில் நிகழ்ந்த இந்த விபத்தில் விஜய்கமலின் மாமனார் ரங்கநாதனும் உயிரிழந்த த நிலையில் குடும்பத்தினர் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விஜய் கமல் மற்றும் அவரின் மாமனார் ரங்கநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.