×

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்… விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு!

திடீரென்று மருத்துவமனையில் இருந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இந்த நிலையில் சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகியோர் தன்னை மிரட்டுவதாக கூறி தற்கொலைக்கு முயன்றார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று
 

திடீரென்று மருத்துவமனையில் இருந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இந்த நிலையில் சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகியோர் தன்னை மிரட்டுவதாக கூறி தற்கொலைக்கு முயன்றார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், தன்னை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக அடையாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “எனக்கு மூச்சு விட சிரமமாக உள்ளது. ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் என்னை டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றிவிட்டது.


சீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. எனக்குப் பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை. நான் நாடகம் போடவில்லை. எனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் தற்போது என்னுடன் இல்லை. என் அனுமதியே இல்லாமல் காயத்ரி ரகுராம் என்னை டிஸ்சார் செய்ய வைத்துள்ளார்” என்றார்.