×

காதலனுடன் மகள் ஓட்டம்! மனமுடைந்த தாய் தீக்குளித்து உயிருக்கு போராட்டம்

திருத்தணி நேரு நகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். மனைவி மகேஸ்வரி( வயது-40). சீனிவாசன் பிளம்பர் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் 17 வயது மகள், பெற்றோரின் சம்மதம் இல்லாமல், வீட்டில் இருந்து காதலனுடன் சென்று விட்ட காரணத்தால் மகேஸ்வரி மனமுடைந்தார். இதனால் இன்று அதிகாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை தீயிலிருந்து மீட்டனர். அதற்குள் தீயில் உடல் எரிந்துவிட்டதால், ஆபத்தான நிலைமையில்
 

திருத்தணி நேரு நகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். மனைவி மகேஸ்வரி( வயது-40). சீனிவாசன் பிளம்பர் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் 17 வயது மகள், பெற்றோரின் சம்மதம் இல்லாமல், வீட்டில் இருந்து காதலனுடன் சென்று விட்ட காரணத்தால் மகேஸ்வரி மனமுடைந்தார்.

இதனால் இன்று அதிகாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை தீயிலிருந்து மீட்டனர். அதற்குள் தீயில் உடல் எரிந்துவிட்டதால், ஆபத்தான நிலைமையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் -62% ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.