×

இறந்த பெண் காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் நிதியுதவி செய்த சக காவலர்கள்!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலரியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. பெண் காவலரான இவர் சமீபத்தில் சென்னையில் பணிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த பவித்ரா பணியில் சேர்ந்து 3 ஆண்டுகளே ஆகும் நிலையில் அவருடன் அதே ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்று சேர்ந்து அவருடைய குடும்பத்திற்கு உதவியுள்ளனர்.
 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலரியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. பெண் காவலரான இவர் சமீபத்தில் சென்னையில் பணிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த பவித்ரா பணியில் சேர்ந்து 3 ஆண்டுகளே ஆகும் நிலையில் அவருடன் அதே ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்று சேர்ந்து அவருடைய குடும்பத்திற்கு உதவியுள்ளனர்.

அதாவது அனைவரும் இணைந்து 12 லட்சத்து 22 ஆயிரத்து 955 ரூபாய் நிதி திரட்டி பவித்ராவின் தந்தை சரவணன், தாயார் பத்மாவதியிடம் காசோலையாக வழங்கினார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.