×

தபால் ஊழியருக்கு கொரோனா : மூடப்பட்ட துணை தபால் அலுவலகம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள தனுஷ்கோடியாபுரம் தெருவை சேர்ந்த 56 வயதான தபால் ஊழியர் ஒருவர் கடந்த 7 ஆம் தேதி சென்னையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு கோவில்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சுகாதாரத் துறையினர் நேற்று தபால் ஊழியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் சென்னைக்கு வந்து திரும்பிய போது அலுவலகம் சென்றுள்ளார்.
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள தனுஷ்கோடியாபுரம் தெருவை சேர்ந்த 56 வயதான தபால் ஊழியர் ஒருவர் கடந்த 7 ஆம் தேதி சென்னையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு கோவில்பட்டிக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சுகாதாரத் துறையினர் நேற்று தபால் ஊழியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவர் சென்னைக்கு வந்து திரும்பிய போது அலுவலகம் சென்றுள்ளார். இதனால் அவருடன் பணிபுரியும் 4 நபர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அத்துடன் துணை தபால் அலுவலகத்தினை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.