×

அமைச்சர் தங்கமணியுடன் சந்திப்பு; முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனையா?

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், பல அரசியல் நிர்வாகிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனால் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த நபர்களைத் தனிமைப் படுத்துவது வழக்கம். நேற்று தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், http://tnpowerfinance.com என்ற புதிய
 

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், பல அரசியல் நிர்வாகிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனால் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த நபர்களைத் தனிமைப் படுத்துவது வழக்கம்.

நேற்று தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், http://tnpowerfinance.com என்ற புதிய வலைத்தளம், TNPFCL என்ற கைப்பேசி செயலி தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி அந்த செயலியைக் காணொளி வாயிலாகத் தொடக்கி வைத்த நிலையில், அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் தங்கமணியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நடத்தியதால் முதல்வர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகிறது.