×

‘கொரோனா பரவல்’ கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தளங்களுடன் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் அளவுக்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிய வேண்டும் , தனிமனித இடைவெளி வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் மக்கள் அதை
 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தளங்களுடன் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் அளவுக்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிய வேண்டும் , தனிமனித இடைவெளி வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் மக்கள் அதை காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

*கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது.

*உணவகங்கள் டீக்கடைகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படும்.

*திருமண நிகழ்வுகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

*வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

*திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆட்டோ, டாக்சிகள் ஓட்டுனர் மற்றும் இரண்டு பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது