×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் தூக்கிட்டு தற்கொலை!

திருவேற்காட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் சொந்தமாக டீ கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் அவருகு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சாலிகிராமத்தில் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்கி சிகிச்சை
 

திருவேற்காட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் சொந்தமாக டீ கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் அவருகு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சாலிகிராமத்தில் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்கி சிகிச்சை பெற்று நேற்று முன் தினம் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார துறையினர் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை மீட்டு தகனம் செய்யும் பனியில் ஈடுபட்டுள்ளனர்.