×

கொரோனா நோயாளி மருத்துவமனை கழிவறையிலேயே மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் இருந்து மக்களை காக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ள நிலையில் 154 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 6,895 பேர் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டுமே 13,362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவி வருவதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் இருந்து மக்களை காக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ள நிலையில் 154 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 6,895 பேர் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டுமே 13,362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவி வருவதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி கழிவறையிலையே மரணமடைந்தார்.50 வயது மதிக்கத்தக்க நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். கழிவறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது சடலமாக கிடந்தார். அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவ்வித்துள்ளனர்.