×

பெண்ணின் இறுதி சடங்கில் பங்கேற்ற பலருக்கு கொரோனா : தொற்றால் இறந்த கணவர்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மதியானி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான மதியானி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் சடலத்துடன் பெண்ணின் கணவர் உட்பட 8 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிராமத்திற்கு சென்றனர். இதையடுத்து அப்பெண்ணின் ஊர்வலத்தில் உறவினர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இறந்த அந்தப் பெண்ணின் உடலுடன் வந்த
 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மதியானி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான மதியானி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் சடலத்துடன் பெண்ணின் கணவர் உட்பட 8 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிராமத்திற்கு சென்றனர். இதையடுத்து அப்பெண்ணின் ஊர்வலத்தில் உறவினர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இறந்த அந்தப் பெண்ணின் உடலுடன் வந்த எட்டு பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரான 72 வயது முதியவர் தற்போது உயிரிழந்துள்ளார். மேலும் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 110 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.