கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதியானது!
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதியானது.
மூன்று முதுநிலை மருத்துவ மாணவர்கள், 2 காப்பாளர்கள், 26 நோயாளிகளுக்கு கொரோனா பரவியது. மனநல நோயாளிகளுக்கு தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது பற்றித் தெரிவிக்க முடியாது. எனவே, அங்கு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதை ஏற்ற நீதிமன்றம் அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.