×

இன்று ஒரே நாளில் 26 பேருக்கு பாதிப்பு..செங்கல்பட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681 ஆக உயர்வு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்த மாவட்டங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலத்திலேயே இருந்து வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்த மாவட்டங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலத்திலேயே இருந்து வருகின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 655 ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மேடவாக்கம், பெரும்பாக்கம், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், குரோம்பேட்டை, பொழிச்சலூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது.