×

எனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்தி சென்றுவிட்டார்!பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல்!!

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரபு. இவரது சொந்த ஊர் தியாகதுருகம். இவரது பெற்றோர்கள் தந்தை ஐயப்பா, தாய் தைலம்மை. இதில் பிரபுவின் தந்தை ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய அதிமுக செயலாளராக சுமார் பத்தாண்டுகளாக பதவியில் உள்ளார். எம்.எல்.ஏ பிரபுவுக்கும் அவரது தந்தைக்கும் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. சுமார் 35 வயதான எம்.எல்.ஏ. பிரபுவுக்குவும் தியாகதுருகத்தில் உள்ள மலையம்மன் கோயில் அர்ச்சகராக உள்ள சாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த சௌந்தர்யாவின் தந்தை
 

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரபு. இவரது சொந்த ஊர் தியாகதுருகம். இவரது பெற்றோர்கள் தந்தை ஐயப்பா, தாய் தைலம்மை. இதில் பிரபுவின் தந்தை ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய அதிமுக செயலாளராக சுமார் பத்தாண்டுகளாக பதவியில் உள்ளார். எம்.எல்.ஏ பிரபுவுக்கும் அவரது தந்தைக்கும் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. சுமார் 35 வயதான எம்.எல்.ஏ. பிரபுவுக்குவும் தியாகதுருகத்தில் உள்ள மலையம்மன் கோயில் அர்ச்சகராக உள்ள சாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் காதல் ஏற்பட்டது.

இதனையறிந்த சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் சாதியை காரணம் காட்டி காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சௌந்தர்யாவின் முழு சம்மதத்துடன் அவரை வீட்டிலிருந்து அழைத்துவந்த எம்.எல்.ஏ. பிரபு தனது உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறைபடி திருமணம் செய்துகொண்டார். ஆனால் சாம்நாதனின் தூண்டுதலின்பேரில் எம்.எல்.ஏ.பிரபு தனது மகள் செளந்தர்யாவை கடத்தி சென்றுவிட்டதாக வதந்தியை சிலர் பரப்பினர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு மற்றும் அவர் தந்தையிடமிருந்து தன் மகளை மீட்டுத்தரக்கோரி சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “19 வயது நிரம்பாத தன் மகளை பிரபு கடத்தி சென்றுள்ளதால், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மற்றும் தியாகதுர்க்கம் காவல் நிலைய ஆய்வாளர் அகியோருக்கு உத்தரவிட வேண்டும். மகள் கடத்தி செல்லப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தனது மகளை அவரிடம் இருந்து மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.