×

பிஇ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.23 முதல் வகுப்புகள் தொடங்கும்- அண்ணா பல்கலை

தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்க வழங்கப்பட்டது. இதனையடுத்து பிஇ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ. 23 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக மாணவர்
 

தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்க வழங்கப்பட்டது.

இதனையடுத்து பிஇ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ. 23 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக மாணவர் சேர்க்கையை அக்டோபர் இறுதிக்குள் முடித்து நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று முன்னர் AICTE அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகளை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று AICTE உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.