×

7 வயது சிறுமியை சீரழித்த 53 வயது முதியவர்!

மதுரை திருமங்கலத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஜூன் 30 ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பல குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கூத்தியார்குண்டு பகுதியில் வசித்துவரும் குருசாமி(53), அவரது வீட்டின் அருகே உள்ள
 

மதுரை திருமங்கலத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஜூன் 30 ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பல குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கூத்தியார்குண்டு பகுதியில் வசித்துவரும் குருசாமி(53), அவரது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.


இதனைக் கண்ட குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.இதன்படி குழந்தையின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் காவல் நிலையத்தில் குருசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.