×

இன்று மாலை 5 மணியளவில் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 6 ஆம் தேதி முதல் தளர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணியளவில் சந்திக்கிறார். கொரோனா பரவல்,
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 6 ஆம் தேதி முதல் தளர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணியளவில் சந்திக்கிறார். கொரோனா பரவல், சாத்தான் குளம் விவகாரம் உள்ளிட்ட சூழலுக்கிடையே முதல்வர் ஆளுநரை சந்திக்க இருக்கிறார். கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து நான்காவது முறையாக ஆளுநரை முதல்வர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.