×

ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

மதுசூதனன் மறைவையொட்டி ஓபிஎஸ் மற்றும் இணை இருகிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு இருவருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது அவைத் தலைவருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் இருந்த மதுசூதனன் 1991 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகரில்
 

மதுசூதனன் மறைவையொட்டி ஓபிஎஸ் மற்றும் இணை இருகிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு இருவருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது அவைத் தலைவருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் இருந்த மதுசூதனன் 1991 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் கைத்தறிதுறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுமார் 15 ஆண்டு காலமாக அதிமுகவின் அவைத்தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் உள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் நடுவே அமர்ந்தவாறு அவர்களிடம் துக்கம் விசாரித்த அவர், அஞ்சலி செலுத்திய பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் ,மதுசூதனன் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார் . முதல்வருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.