மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான் – தமிழக அரசைக் குட்டிய சென்னை உயர் நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, ஆளுநருக்கு கோப்பு அனுப்பியது. ஆனால், அது தொடர்பான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் முருகனின் தந்தை இலங்கையில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கை ஆன்லைன் வீடியோவில் பார்க்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி தர தமிழக அரசு மறுத்தது. இலங்கையில் உள்ள தன்னுடைய அம்மாவிடம் பேச அனுமதி கேட்டபோது, அதற்கு அனுமதி தர மறுத்தது தமிழக அரசு.