×

சென்னையில் அதிவேகமாக பரவும் கொரோனா.. தேனாம்பேட்டையிலும் 1000 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,000ஐ நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். இதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் அமல்படுத்த பட்டுள்ளது. அதன் மூலம், அதிகமாக கொரோனா பரவும்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,000ஐ நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். இதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் அமல்படுத்த பட்டுள்ளது. அதன் மூலம், அதிகமாக கொரோனா பரவும் 33 பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 1768 பேரும் , தண்டையார்பேட்டையில் 881 பேரும் , திரு.வி.க நகரில் 1079 பேரும் , அண்ணா நகரில் 763 பேரும் , தேனாம்பேட்டையில் 1000 பேரும் , கோடம்பாக்கத்தில் 1300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 9,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம், திரு.வி.க நகரில் கொரோனா பாதிப்பு 1000ஐ எட்டியிருந்த நிலையில் தேனாம்பேட்டையிலும் கொரோனா பாதிப்பு 1000ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.