×

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களின் பட்டியலில் சேர்ந்தது செங்கல்பட்டு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 14,901 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டுமே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 78 பேருக்கு
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 14,901 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டுமே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,615 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களில் செங்கல்பட்டு மாவட்டமும் இருக்கிறது என்றும் இதுவரை சென்னை மட்டுமே அந்த பட்டியலில் இருந்த நிலையில் செங்கல்பட்டும் தற்போது சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.