×

காணாமல் போனதாக தேடப்பட்ட இளம்பெண்கள் கிணற்றில் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அமைப்பாக்கம் கிராமத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டு இளம்பெண்கள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.பத்தாம் வகுப்பு படித்து வரும் பிரியங்கா (16 ) மற்றும் அவரது சகோதரி செண்பகவல்லி 12 வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், நேற்று முந்தினம் இரவு முதல் சிறுமிகளை காணவில்லை என தேடி வந்தனர். இந்த நிலையில், வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து இருவரது உடலும்
 

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அமைப்பாக்கம் கிராமத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டு இளம்பெண்கள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்பு படித்து வரும் பிரியங்கா (16 ) மற்றும் அவரது சகோதரி செண்பகவல்லி 12 வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்களது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், நேற்று முந்தினம் இரவு முதல் சிறுமிகளை காணவில்லை என தேடி வந்தனர். இந்த நிலையில், வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து இருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.