தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு?.. முடிவடைந்தது ஆலோசனை கூட்டம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களை காக்க 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, தேனி மற்றும் மதுரையில் கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கிறது.