×

ஷேர் ஆட்டோவில் பயணித்த ஆசிரியையிடம் செயின் பறிப்பு; வசமாக சிக்கிய கொள்ளையர்கள்!

சென்னை பல்லாவரம் அருகே ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அருகே ஷேர் ஆட்டோவில் சரஸ்வதி என்ற ஆசிரியை பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அவருடன் ஒரு பெண்ணும் ஆணும் ஆட்டோவில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆட்டோவில் இருந்த பெண் , சரஸ்வதி அணிருந்திருந்த நகையை கையால் அறுத்துக் கொண்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த சரஸ்வதியை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே,
 

சென்னை பல்லாவரம் அருகே ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகே ஷேர் ஆட்டோவில் சரஸ்வதி என்ற ஆசிரியை பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அவருடன் ஒரு பெண்ணும் ஆணும் ஆட்டோவில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆட்டோவில் இருந்த பெண் , சரஸ்வதி அணிருந்திருந்த நகையை கையால் அறுத்துக் கொண்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த சரஸ்வதியை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே, சரஸ்வதி கீழே தள்ளிவிடப்பட்டதை அறிந்த பொதுமக்கள் சிலர் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் இருந்து நகையை கைப்பற்றிய பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் பிரசாந்த் மற்றும் ரோஸ்மேரி என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்ட பகலில் சென்னையில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.