தமிழக காவல் அதிகாரிகள் 6 பேருக்கு மத்திய அரசின் விருது அறிவிப்பு!
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திலும் கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்ற சம்பவங்களில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை தொடர்ந்து சிறப்பான பணியை ஆற்றி வருகிறது. அந்த வகையில் குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Aug 12, 2020, 13:53 IST
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திலும் கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்ற சம்பவங்களில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை தொடர்ந்து சிறப்பான பணியை ஆற்றி வருகிறது. அந்த வகையில் குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கவுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜான்சி ராணி, கவிதா, பொன்னம்மாள், கலா, சந்திரகலா மற்றும் வினோத்குமாருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 121 விசாரணை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.