முகமது நபியை இழிவுபடுத்தி கார்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மா கைது!
முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மா என்று அழைத்துக்கொள்ளும் சுரேந்திர குமாரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் ஒரு பக்கச் சார்புடையவர்கள் என்று மாரிதாஸ் புகார் எழுப்பினார். தனியார் ஊடகத்திலிருந்து தனக்கு இ-மெயில் கிடைத்தது என்று பெரிய வீடியோ வெளியிட்டார். அந்த இ-மெயில் போலியானது என்று தெரியவரவே, சமூக ஊடகத்தில் பலரும் அவரைக் கழுவி கழுவி ஊற்றினர். இதை சமாளிக்க, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் இந்து கடவுளை அவமானப்படுத்துகிறது, இதை செய்வது ஒரு இஸ்லாமியர் என்று புகார் கிளப்பினார்கள் சங் பரிவார் ஆதரவாளர்கள்.
இதைத் தொடர்ந்து கார்டூனிஸ்ட் வர்மா என்பவர், இந்துக் கடவுளை அவமானப்படுத்திய இஸ்லாமியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் இஸ்லாமை விமர்சித்து கார்ட்டூன் வெளியிடுவேன் என்று அறிவித்தார். அதன்படி கார்ட்டூனையும் வெளியிட்டார்.
சுரேந்திர குமார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் இந்து அமைப்புகள் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தின. போலீஸ் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.