மீன் ஏற்றுமதிக்கு மீண்டும் கார்கோ விமான சேவை! – மீனவர்கள் வலியுறுத்தல்
கடல் உணவு ஏற்றுமதிக்கு கார்கோ விமானங்களை இயக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாகை மீனவர்கள் கூறுகையில், “இங்கு பிடிக்கப்படும் மீன்கள், இறால், நண்டு உள்ளிட்டவை ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சரக்கு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மீன் பிடித்தாலும் ஏற்றுமதி செய்ய முடியாது. கடல் உணவுகளை கொண்டு செல்ல பழையபடி கார்கோ விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமாகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என்றனர்.