×

இந்து இளைஞருக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் திருமணம்- பாஜகவினர் நேரில் வாழ்த்து

உணர்வுக்கு உயிரோட்டம் கொடுத்து இரு மதங்களை இணைத்த திருமணம்: காரைக்குடியில் இந்து இளைஞருக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த திருமணம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் புதுத்தெருவை சேர்ந்த காதர் மைதீன் – ராஜாத்தி தம்பதியினர் மகள் ரகுமத் நிஷா. ஆனந்தன் – சித்ரா தம்பதியர் மகன் செந்தில்குமார். இருவரும் காரைக்குடியில் உள்ள வெவ்வேறு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் போது ஏற்பட்ட நட்பு பின் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுக்கும்
 

உணர்வுக்கு உயிரோட்டம் கொடுத்து இரு மதங்களை இணைத்த திருமணம்: காரைக்குடியில் இந்து இளைஞருக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த திருமணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் புதுத்தெருவை சேர்ந்த காதர் மைதீன் – ராஜாத்தி தம்பதியினர் மகள் ரகுமத் நிஷா. ஆனந்தன் – சித்ரா தம்பதியர் மகன் செந்தில்குமார். இருவரும் காரைக்குடியில் உள்ள வெவ்வேறு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் போது ஏற்பட்ட நட்பு பின் காதலாக மாறியது.

கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மதங்கள் வேறானாலும், மனங்கள் ஒன்றுபட்டு நின்ற வென்றனர் காதலர்கள்.


பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் பெற்றோரின் முயற்சிக்கு பலன் இல்லை. போராடி வெல்வோம் என்ற காதலர்களின் முயற்சி வெற்றியில் முடிந்தது.

மதங்களை விட தங்களின் பிள்ளைகளின் மனங்களே முக்கியம் என்று கருதிய இரு வீட்டாரும் சம்மதிக்க நேற்று காரைக்குடி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மணமகன், மணப்பெண் இருவரும் மாலை மாற்றி மோதிரம் அணிவித்து திருமணம் நடைபெற்றது இப்பகுதியில் உள்ள ஒரு சில இஸ்லாமிய அமைப்பினர் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பா.ஜ.கவினர் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.