×

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசே ஈடுசெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பெரும் தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும் , நோய்களை கட்டுப்படுத்தவும் , சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாதவன் நேர்வுகளில் இழப்புகள் நிகழ்ந்து விடுகின்றன. துயரமான
 

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசே ஈடுசெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பெரும் தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும் , நோய்களை கட்டுப்படுத்தவும் , சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாதவன் நேர்வுகளில் இழப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.

துயரமான இந்த சம்பவத்தில் சில காரணங்களினால் இறப்பு குறித்த வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல், பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000படி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை கால தாமத கட்டணம் ரூபாய் 100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டுக்குள் கால தாமத கட்டணம் ரூபாய் 200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் கால தாமத கட்டணம் ரூபாய் 500 ஆகவும் உள்ளது.

இந்த கட்டணம் முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அடிப்படையில் கட்டணத்தில் இருந்து பொதுமக்களுக்கு விளக்கவும், அந்தக் கால தாமத கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.