×

இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர் மீது தாக்குதல் : 5 பேர் கைது!

சென்னை எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ராஜு, கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு வடபழனி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அப்போது அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, ராஜு அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார். உடனே அந்த இளம்பெண் அலற, அங்கிருந்த பொதுமக்கள் ராஜுவை பிடித்து அடித்து உதைத்தனர். அதோடு, அந்த பெண்ணின் கையாலேயே செருப்பைக் கொண்டு ராஜுவை அடிக்கச் செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
 

சென்னை எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ராஜு, கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு வடபழனி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அப்போது அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, ராஜு அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார். உடனே அந்த இளம்பெண் அலற, அங்கிருந்த பொதுமக்கள் ராஜுவை பிடித்து அடித்து உதைத்தனர். அதோடு, அந்த பெண்ணின் கையாலேயே செருப்பைக் கொண்டு ராஜுவை அடிக்கச் செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பொதுமக்கள் மற்றும் இளம்பெண்களிடம் தகராறு செய்து வந்த காவலர் ராஜு ஏற்கனவே கேகே நகர் காவல் நிலையத்தில் இருந்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது. ராஜு மீது உரிய நடவடிக்கை எடுக்க வடபழனி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமையன்று ராஜுவை தாக்கிய தங்கமணி, அருண் ,விக்னேஷ் அஸ்வின், கார்த்திக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.