×

அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கடந்த கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த சூழலில் நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வும் ஆன்லைனிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் மறு தேர்வு எழுத வரும் 14-ம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே
 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கடந்த கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த சூழலில் நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வும் ஆன்லைனிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் மறு தேர்வு எழுத வரும் 14-ம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான மறு தேர்வு ஜூன் இறுதியில் தொடங்கி ஜூலை இறுதி வரை நடைபெற உள்ளது.